1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (22:13 IST)

சச்சின் டுவிட்டிற்கு மத்திய அரசின் அழுத்தம் காரணமா? மகாராஷ்டிரா அரசு விசாரணை!

சச்சின் உள்பட பிரபலங்களின் டுவிட்டுகளுக்கு காரணம் மத்திய அரசின் அழுத்தம் என்பது குறித்து விசாரணை செய்ய மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குறித்து பாப் பாடகி ரிஹானா டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். இந்த ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் சுரேஷ் ரெய்னா விராத் கோலி உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் தங்களுடைய டுவிட்டரில் பதிலடி கொடுத்தனர்.
 
இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்களின் டுவீட்டிற்கு மத்திய அரசின் அழுத்தம்தான் காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சையை கிளப்பிய சச்சின் டெண்டுல்கர் குறித்த பிரபலங்களின் வீட்டிற்கு மத்திய அரசின் அழுத்தம் காரணமா என்பது குறித்து விசாரணை செய்ய மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது