1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 11 மே 2014 (21:00 IST)

மராட்டிய மாநிலத்தில் பொலிசார் மீது கண்ணிவெடித் தாக்குதல்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நிலக் கண்ணி வெடியில் சிக்கி காவல்துறையினர் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கத்சிரோலி என்ற மாவட்டத்தில் வனப்பகுதியின் ஊடாக காவல்துறையின் சிறப்புப் படையினர் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மாவோயியக் கிளர்ச்சிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இச்சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
 
குண்டுவெடிப்பை அடுத்து பொலிசார் மாவோயியவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டையொன்றும் நடந்துள்ளது.