வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:30 IST)

3 மாதங்களில் 350 ஆன்லைன் வகுப்புகள்… உலகசாதனை படைத்த கேரள மாணவி!

கொரோனா லாக்டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 350 ஆன்லைன் கோர்ஸ்களை படித்து முடித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த மாணவி.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கிட்டத்தட்ட 6 மாத காலமாக அமலில் உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரி போன்ற அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதைப்பயன்படுத்தி கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 3 மாதங்களில் 350 ஆன்லைன் வகுப்புகளை படித்து முடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஆரத்தி ரெகுநாத், யுனிவர்சல் ரெக்கார்ட் மன்றத்தில் (யுஆர்எஃப்) இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் கேரளாவில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் பயோ கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.