வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (14:48 IST)

காஷ்மீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 277 ஆக அதிகரிப்பு - ஒமர் அப்துல்லா தகவல்

காஷ்மீர் மாநிலத்தில் கன மழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை பெய்ததால், நிலச்சரிவு,  வெள்ளப்பெருக்கு ஆகியவற்றில் சிக்கி பல மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்றும், மழை பாதித்த பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.
 
இதன்காரணமாக நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் வெள்ளநீர் முழுமையாக வடியாததால் இறந்த கால்நடைகளிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது
இதைத்தொடர்ந்து, தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.