1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:58 IST)

பலாத்காரத்தை வரவேற்கிறாரா ராகுல்? பாஜக பெண் எம்பி பாய்ச்சல்!

ராகுல் காந்தி பெண்களை யார் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம் என்பதை வரவேற்கிறாரா என பாஜக பெண் எம்பி லாக்கெட் சாட்டர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மக்களவை கூட்டத்தில் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி ”நரேந்திர மோடி மேக் இன் இந்தியாவை உருவாக்குவதாக கூறினார். ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் இதுபற்றி நரேந்திரமோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று கூறினார்.
ராகுல்காந்தி ரேப் இன் இந்தியா என்று பேசியதற்கு எதிராக பாஜக பெண் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ராகுலோ மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், பாஜக பெண் எம்பி லாக்கெட் சாட்டர்ஜி இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, பிரதமர் மோடி 'மேன் இன் இந்தியா' என்று கூறிவருகிறார். ஆனால் ராகுல் காந்தியோ 'ரேப் இன் இந்தியா' என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் ராகுல் காந்தி பெண்களை யார் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம் என்பதை வரவேற்கிறாரா. இப்படி பேசியதன் மூலம் ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்திய பெண்களையும் அவமதித்துவிட்டார். பாரத மாதாவையும் அவமரியாதை செய்துவிட்டார் என்று பேசியுள்ளார்.