1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (13:46 IST)

நான் தற்கொலைக்கு முயலவில்லை : இந்திராணி முகர்ஜி

தான் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை என்றும்,  தன்னுடைய தாய் இறந்த துக்கம் தாங்கிக்கொள்ள முடியாமலேயே தன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
மகளை கொலை செய்த வழக்கில் மும்பை சிறையில் இருப்பவர் இந்திராணி முகர்ஜி. கடந்த வாரம் இவருக்கு சிறையில் திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இரண்டு மூன்று நாட்கள் சுய நினைவின்றி அவர் படுக்கையிலேயே இருந்தார். அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்று தகவல்கள் வெளியாகின. 
 
இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பூரண குணம் அடைந்தார். அதையடுத்து அவரை மும்பை காவல் துறையினர் மீண்டும் சிறையில் அடைத்தார்கள்.
 
இந்நிலையில், காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை என்றும்,  தன்னுடைய தாய் இறந்த துக்கம் தாங்கிக்கொள்ள முடியாமலேயே தன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். மேலும் தனக்கு யாரும் மாத்திரைகளை தரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.