1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (12:14 IST)

கொரோனாவால் முதல் இளைஞர் பலி: எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் வயதானவர்கள் மட்டுமே அதிகமாக உயிரிழப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 341 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களே கொரோனாவால் பலியாகி இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு முதன்முறையாக 38 வயது நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை சேர்ந்த இளம் நபர் உயிரிழந்துள்ள நிலையில் மகராஷ்டிராவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.