1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (10:13 IST)

கொரோனா சிகிச்சை எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது! – இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக 8 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் மீண்டும் குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,594 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,26,61,370ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 50,548 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 195.35 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.