1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (09:59 IST)

குஜராத்ததில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளில், நேற்று முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் 14ஆம் தேதி மீதமுள்ள 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தல் முடிவுகள் டிச.18ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று மாலையின் முடிவில், 89 தொகுதிகளில் மொத்தம் 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.