வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2015 (14:06 IST)

அப்துல் கலாம் சாலையில் வசிப்பதை பெருமையாக கருதுகிறேன்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு

டெல்லியில் அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்ட பகுதியில் வசிப்பதில் பெருமைப்படுகிறேன் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த புத்தகவெளியீட்டு விழாவில் பேசிய மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு முன்பு ஔரங்கசீப் சாலை என்ற முகவரியில் வசித்து வந்த போது என் முகவரியை யாருக்காவது தெரிவிக்கும் போது தயக்கமும், கூச்சமும் ஏற்படும். இப்போது அந்தசாலை அப்துல் கலாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, நான் இங்கு வசிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

மேலும் மண்ணின் மைந்தனும் முன்னாள் ஜனாதிபதியுமான மறைந்த அப்துல்கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பகுதியில் வசிப்பதில் பெருமைப் படுகிறேன். வெளிநாட்டை சேர்ந்தவரின் பெயருக்கு பதிலாக, இந்த மண்ணின் மைந்தனின் பெயர் சூட்டப் பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. மேலும் பேசிய அமைச்சர், அவுரங்கசீப் சாலையை பெயர் மாற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தியது பாஜகவை சேர்ந்தவரோ ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களோ அல்ல. பாகிஸ்தானில் பிறந்து, தற்போது கனடாவில் வசிக்கும் தாரிக்படேல் என்ற பத்திரிகையாளர் தான் என தெரிவித்தார்.