ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி
ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி
ஹூப்ளி ரயில் நிலையத்தின் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி ரயில்வே நிலையத்தில் பழமையான கட்டிடத்தில் ரயில்வே பார்சல் சேவை நிலையமும், ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையமும் உள்ளது.
இந்த நிலையில், இன்று மதியம் திடீரென்று அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்தக காவல் ஆணையாளர் பி.ஹெச்.ராணே தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தக் கட்டிடம் சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.