1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (14:40 IST)

துருக்கி விமானநிலைய தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய ஹிரித்திக் ரோஷன்

துருக்கி விமானநிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் ஹிரித்திக் ரோஷன் குடும்பத்தோடு உயிர் தப்பினார். 


 

 
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஐ.எஸ் தீவிரவாதிகளின் தற்கொலை படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 36 பேர் உயிரிழந்தனர், 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
 
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் துருக்கியில் அவரது குடும்பத்தோடு சுற்றுலா பயணம் சென்றுள்ளார். தாக்குதல் நடந்தபோது ஹிரித்திக் ரோஷன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் விமான நிலையத்தில் இருந்துள்ளனர். தாக்குதலில் எந்த பாதிப்பும் அடையாமல் உயிர் தப்பினர்.
 
பாதுகாப்பாக நாடு திரும்பிய ஹிரித்திக் ரோஷன், அவருக்கு உதவி செய்த விமான நிலையப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இஸ்தான்புல் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.