1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 8 ஜூன் 2016 (12:13 IST)

புதுச்சேரியிலும் இனிமேல் ஹெல்மெட் கட்டாயம்

சென்னையை போல புதுச்சேரி மாநிலத்திலும், இரு சக்கர வாகங்கள் ஓட்டுபர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


 
புதுச்சேரி கவர்னராக, கிரண்பேடி சமீபத்தில் பதவியேற்றார். அதன்பின் பொதுமக்களை சந்தித்தார். அதில், வாகன விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் அணிவது அவசியம் என்று கூறினார்.
 
இதையடுத்து போக்குவரத்து துறை சார்பில், இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
மேலும், போக்குவரத்து துறை ஆணையர் சுந்தரேசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “இருசக்கர வாகனம் விற்கும் போது ஹெல்மெட்டையும் அவசியம் சேர்த்து விற்பனை செய்ய வேண்டும். அதற்கான ரசீதையும் இணைத்தால்தான் வாகனங்கள் பதிவு செய்யப்படும். வருகிற 15-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும். ஓட்டுநர் உரிமம் பெற வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.