வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (23:12 IST)

குஜராத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பலி

குஜராத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பலி

குஜராத்தில் அரது பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பரிதாபமாக பலியானார்கள்.


 

குஜராத் அரசு பஸ் பயணிகளுடன் நவ்சாரியில் இருந்து உகாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது. அப்போது, பஸ், பூர்ணா ஆற்றுப் பாலத்தில் சென்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் திடீரென கவிழ்ந்தது.
 
இந்த  விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 37 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.