1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 26 மே 2021 (17:31 IST)

புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்ற கூகுள் விதி...வாட்ஸ் ஆப் வழக்கு

இந்தியாவின் புதிய சட்டங்களுக்கு உட்பட்டு புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க சம்பதித்துள்ளது கூகுள் நிறுவனம்.

உலகில் முன்ணி சமூக வலைதளங்களான டுவிஉட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவரை மத்திய அரசு விதித்துள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.

இந்தியாவில், மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டுமென விதிக்கப்படுள்ள கெடு இன்று முடியவுள்ள நிலையில் இதுகுறித்து அரசிடன் விளக்கம் கேட்க உள்ளதாக ஃபேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இப்புதிய விதிமுறைகளின்படின் ஐடி விதிகளுக்கு உட்பட்டு மக்கள் சுதந்திரமாக கருத்துகளை வெளியிட ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாகிஅவும், அதேபோல் ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்ப்பாடுகள் பிப்ரவரி வரையில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இதைச் செயல்படுத்தும் காலத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்துள்ளாது.

இந்நிலையில். டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள், புதிய விதிகளை ஏற்பதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் விதிகளை ஏற்காத நிறுவனங்கள் மீண்டும் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், கூகுள் செய்தித்தொடர்பாளர், இந்தியாவின் சட்டமியற்றும் நடவடிக்கைகளை தாங்கள் மதிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் கூகுள்  நிறுவனத்தின் பயனாளர்களுக்கும், அந்நிறுவனத்திற்கும்,ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

 இன்று மத்திய அரசின் புதிய புதிகளை எதிர்த்து வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் டெல்லி நீதிமன்ற்த்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.