1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (22:32 IST)

சிறுமி கொலை வழக்கு: விசாரணைக்கு சிறப்பு குழு அமைப்பு!

Death
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இந்த வழக்கில்  சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சிக்குபோது கொலை செய்ததாக  கருணாஸ், விவேகானந்தன் ஆகிய 2 பேர் போலீசில் வாக்குமூலம்  அளித்ததை அடுத்து,  அவர்கள் மீது, போக்சோ, கொலை செய்தல், கடத்தல், அடைத்து வைத்தல்  6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை பிரசுரிக்க கூடாது எனவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.