1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (21:27 IST)

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் : மத்திய அரசு அதிரடி

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
தேர்தலின் போது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அதற்கான சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள சாதக மற்றும் பாதகங்களை யுசிசி ஆய்வு செய்து வருகிறது. 
 
மேலும், இதுபற்றி மத்திய சட்டதுறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் பொதுசிவில் சட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களும், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்தியாவில் முதல் முறையாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு முனைப்பு காட்டியிருக்கிறது தற்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.