1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ravivarma
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (13:24 IST)

‌நிதிநிலை அறிக்கை 2014-15 - உடனுக்குடன் (Live)

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர‌சி‌ன் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ம‌க்களவை‌யி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்‌து வரு‌கிறா‌ர். அதில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் உங்களுக்காக... 

வ‌ரி தொட‌ர்பான அ‌றி‌வி‌ப்புகளுட‌ன் நி‌தி‌‌நிலை அ‌றி‌க்கையை நி‌தியமை‌ச்ச‌ர் அரு‌ண் ஜே‌ட்‌லி ‌நிறைவு செ‌ய்ததையடு‌த்து ம‌க்களவையை ஒ‌த்‌திவை‌ப்பதாக அ‌றி‌வி‌த்தா‌ர் ம‌க்களவை‌த் தலைவ‌ர் சு‌மி‌த்ரா மகாஜ‌ன். 


சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 விழுக்காடு வரி உயர்வு. 
 
அச்சு ஊடகங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு. 
 
டி.வி.களில் பயன்படுத்தப்படும் பிக்சர் டியூப்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு. 

---------------

காலணிகளுக்கான உற்பத்தி வரி 6 விழுக்காடாக குறைக்கப்படும். 
 
சிகரெட் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாக உயர்வு. 
 
பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களின் தான வரி 16 விழுக்கடாக உயர்வு.

---------------

வைரம், நவரத்தினக் கற்கள் விலை குறையும். 
 
மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர்கள் விலை குறையும். 
 
காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களுக்கு வரி குறைப்பு. 
 
எவர் சில்வர் பொருட்களுக்கான வரி 5 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரிப்பு. 
 
நேரடி வரிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம். 

------------------

25 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் முதலீட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்படும். 
 
புதிய மின் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி கிடையாது. 
 
கல்வி வரியில் மாற்றம் இல்லை. 
 
வரி செலுத்துவோர் நலனிற்காக 60 புதிய சேவை மையங்கள் அமைக்கப்படும். 
 
கொழுப்பு அமிலம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சங்க வரி ரத்து. 
 
சோப்பு தயாரிப்பிற்கான உற்பத்தி வரி குறைப்படும். 
 
பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான சுங்க வரி 5 விழுக்காட்டிலிருந்து. 2.5 விழுக்காடாக குறைப்பு. 
 
தொலைதொடர்பு உபகரணங்களுக்கு 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிப்பு. 
 
கம்ப்யூட்டர், சோப்பு, சிறிய எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி. விலை குறையும். 

---------------------

வருமான வரி உச்சவரம்பு உயர்வு!
 
தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்வு. 
 
முதியோருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்வு. 

சேமிப்பிற்கான 80 சி பிரிவில் வரி விலக்கு ரூ.1.5 லட்சமாக உயர்வு. 
 
வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்வு. 

-------------------
 


விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
குத்துச்சண்டை, வில் வித்தை, துப்பாக்கிச் சுடுதல் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி தர புதிய பயிற்சி மையங்கள். 
 
மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.100 கோடி. 
 
காவல் துறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.3,000 கோடி. 
 
புதுச்சேரிக்கு பேரிடர் நிதி உதவியாக ரூ.188 கோடி ஒதுக்கீடு. 
 
ஆசிய, காமன்வெல்த் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

--------------------

நதிகளை இணைக்கும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
நவாமி கங்கா என்ற கங்கையை தூய்மைப்படுத்தும் புதிய திட்டத்திற்கு ரூ.2,307 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
கங்கை நதியை சுத்தப்படுத்த அயல் நாடு வாழ் இந்தியர் நிதித் திட்டம் உருவாக்கப்படும். 
 
பெண் குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்கு புதிய சேமிப்பு திட்டம். 
 
காஷ்மீரில் உள், வெளி விளையாட்டு அரங்குகள் உலகத் தரத்தில் உருவாக்கப்படும். 
 
தேசிய விளையாட்டு ஆணையம் விரைவில் உருவாக்கப்படும். 
 
பெங்களூரு, ·பரிதாபாத்தில் உயிரி தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்படும். 
 
உத்தரகாண்டில் தேசிய இமாலய கல்வி மையம் அமைக்கப்படும். 
 
புலம் பெயர்ந்த காஷ்மீர் மக்களின் நலன் காக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
போர் நினைவுச் சங்கங்கள், அருங்காட்சியங்கள் அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
எல்லையோர கிராமப்புறங்களை மேம்படுத்த ரூ.990 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
---------------

அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
 
ஒரு குடும்பத்திற்கு இரண்டு வங்கக் கணக்குகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
 
ஹைதராபாத், சிலிகுரி உள்ளிட்ட 6 இடங்களில் கடன் வசூல் மையங்கள் அமைக்கப்படும். 
 
பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு சிறப்பு சேமிப்புத் திட்டம். 
 
அனைத்து பணப் பரிமாற்றங்களுக்கும் ஒரே டிமேட் கணக்கு. 
 
பாதுகாப்புத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.2.29 லட்சம் கோடி. 
 
பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
அயல் நாட்டு நிதி உதவியை வரையறைப்படுத்த புதிய வரித் திட்டம். 
 
இராணுவ வீரர்களுக்கு பதவிக்கு ஏற்ற வகையில் ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம். 
 
மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்படும். 

-----------------
 


நடப்பாண்டில் புதிதாக 16 துறைமுகங்கள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
அரசின் அனைத்து அமைச்சகங்களும் மின்னணு முறையில் ஒருங்கிணைக்கப்படும். 
 
கூடுதலாக 15,000 கி.மீ. தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கப்படும். 
 
அலகாபாத்தில் இருந்து ஹல்டியா வரை கங்கையை இணைக்க ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு புத்துயிர் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
 
தமிழ்நாடு, ராஜஸ்தானில் சூரிய மின் சக்தி திட்டம் தொடங்கு ரூ.500 நிதி ஒதுக்கீடு. 
 
புதிய விமான நிலையங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். 
 
வருங்கால வைப்பு நிதி கணினி மயமாக்கப்படும். 
 
உயர் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் திட்டப் பணிகளுக்கு ரூ.100 கோடி. 
 
சுரங்கத் தொழிலை ஊக்கப்படுத்த சுரங்க, கனிம வள சட்டம் திருத்தப்படும். 
 
வடகிழக்கு மாநிலங்களில் சாலை சீரமைப்பிற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
-------------------


குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தர ரூ.4,000 கோடி ஒதுக்கீடு. 
 
மாநில அரசுகள் ஏற்றுமதியை ஊக்கவிக்க வேண்டும். 
 
தங்க நாற்கர பாதையில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். 
 
தூத்துக்குடியில் வெளிப்புறத் துறைமுகம் அமைக்கப்படும். 
 
நடப்பு ஆண்டில் 2 ஆயிரம் தொழில் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். 
 
நவீன மயமான தொழிலக நகரங்க‌ள் 7 இடங்களில் ஏற்படுத்தப்படும். 

----------------


சென்னை - பெங்களூரு தொழிற்பாதை திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்படும். 
 
கிடங்குகளின் திறனை அதிகரிக்க ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 
 
நிலங்களுக்கு ஏற்ற பயிர்களை தேர்வு செய்யும் மண் பரிசோதனைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. 
 
சுற்றுச்சூழல் மாற்றங்களை ஆராய புதிய நிறுவனம். 

------------------

அசாம், ஜார்க்கண்டில் புதிய விவசாய ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். 
 
விவசாயத்தில் 4 விழுக்காடு வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
விவசாய விளை பொருட்களை பாதுகாக்க ரூ.5,000 கோடியில கிடங்குகள் அமைக்கப்படும். 
 
ஆந்திரா, ராஜஸ்தானில் புதிய வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். 
 
நகர்ப்புறங்களில் விவசாயிகளே சந்தைகள் அமைக்க ஊக்குவிக்கப்படும். 
 
நிலம் இல்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் உதவி திட்டம். 

--------------------
 

 
நகர கட்டுமான வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்படும். 
 
நாட்டில் உள்ள முக்கிய சந்தைகளை ஒருங்கிணைக்க புதிய திட்டம் உருவாக்கப்படும். 
 
தெலங்கானா, அரியானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். 
 
அனைத்து விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு. 

----------------------

5 ‌நி‌மிட‌ம் ஒ‌த்‌திவை‌ப்பு!

‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை தா‌க்க‌ல் செ‌ய்து‌ கொ‌ண்டிரு‌ந்த ‌நி‌தியமை‌ச்ச‌ர் அரு‌ண் ஜே‌ட்‌லி, 5 ‌நி‌மிட‌ம் இடைவேளை வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌க்களவை‌த் தலைவ‌ர் ‌சு‌மி‌த்ரா‌விட‌ம் கோ‌ரியதையடு‌த்து 5 ‌நி‌‌மிட‌த்‌தி‌ற்கு ம‌க்களவையை ஒ‌த்‌‌திவை‌‌‌த்தா‌ர் அவை‌த் தலைவ‌ர். 

----------------

லக்னோ, அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.100 கோடி. 
 
மென்பொருள் தொடர்பான சிறு தொழில் தொடங்குவோர் ஊக்குவிக்கப்படுவர். 
 
நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்து தர ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு. 

--------------------
 
ஆந்திரா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். 
 
சென்னை மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம், காச நோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும். 
 
அனைத்து அரசுப் பெண்கள் பள்ளியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்படும். 
 
புதிதாக 5 IIM, IIT-கள் உருவாக்கப்படும். 
 
கல்விக் கடன் விதிமுறைகள் எளிமையாக்கப்படும். 
 
சமுதாய வானொலி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. 
 
பிராட்பேண்ட் மூலம் கிராமப்புறங்கள் இணைக்கப்படும். 
 
ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.33,000 கோடி நிதி ஒதுக்கீடு.

----------------------
 

 
வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.14,389 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் 100 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும். 
 
டெல்லியைப் போன்று சென்னையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். 
 
தேசிய வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு. 
 
படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை விரிவுபடுத்தப்படும். 
 
சிறு தொழில் முனைவோரின் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி. 
 
மின் விநியோகத் திட்டங்களுக்கு ரூ.500 கோடி. 

---------------------

2019 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும். 
 
மூத்த குடிமகன்களின் கோரப்படுத்த பி.எ·ப்., தபால், வங்கி கணக்குகளை முறைப்படுத்தக் குழு அமைக்கப்படும். 
 
அடுத்த 6 மாதங்களில் 9 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். 
 
அடுத்த 6 மாதங்களில் 9 விமான நிலையங்களில் மின்னணு விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 
 
ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து முறை அறிமுகம் செய்யப்படும். 
 
உரிமை கோரப்படாத பி.எ·ப். பணத்தை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்படும். 
 
வங்கி அல்லாத சேமிப்பாக ‌கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 
 
பொது போ‌க்குவர‌த்‌தி‌ல் பய‌ணி‌க்கு‌ம் பெண்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு. 

--------------------

100 நகரங்களை மேம்படுத்த ரூ.7,060 கோடி ஒதுக்கீடு. 
 
பாசன வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி. 
 
அனைத்து வீடுகளிலும் 24 மணி நேரம் மின்சாரம் ஏற்படுத்துவதே இலக்கு. 
 
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.50,047 கோடி ஒதுக்கீடு. 

-------------------
 

வங்கித் துறையை ஊக்குவிக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
 
2018 ஆம் ஆண்டிற்குள் வங்கிகளுக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படும். 
 
வங்கிகளுக்கு தன்னாட்சி அளித்து கூடுதல் பொறுப்புடைமை ஆக்க பரிசீலனை. 
 
மின்னணு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 
 
இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர ஸ்கில் இந்தியா என்ற பெயரில் புதிய திட்டம். 
 
குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவ ரூ.200 ஒதுக்கீடு. 

-------------------------

பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காடாக அதிகரிக்கப்படும். 

கா‌ப்‌பீ‌ட‌்டு‌த் துறை‌யிலு‌ம் அ‌ந்‌நிய நேரடி முத‌லீடு 49 ‌விழு‌க்காடாக அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம். 

ப‌ல்வேறு துறைக‌ளி‌ல் ‌அ‌ந்‌நிய நேரடி முத‌லீடு மூல‌ம் ‌நி‌தி ஆதார‌ம் ‌திர‌ட்டட‌ப்படு‌ம். 
 
திறமையான நிர்வாகத்திற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம். 
 
முதலீட்டளார்களுக்கு சாதகமான வரி கொள்கைகள் உருவாக்கப்படும். 
 
தொழிற்துறையுடன் அடிக்கடி ஆலோசனை நடத்த தனி குழு அமைக்கப்படும். 

 
-------------------

மாற்றத்திற்காக வாக்களித்து மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். 
 
வேலையின்மை, வறுமையை நாடு இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்காது. 
 
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். 
 
அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை ஆராய வேண்டியிருக்கிறது. 
 
பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. 
 
உற்பத்தி, கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னுரிமை. 
 
ஈராக் உள்நாட்டுப் போர் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

துவக்க உரையில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 8 விழுக்காடு வளர்ச்சி இலக்காக இருக்கும் எ‌ன்று அரு‌ண்‌ ஜே‌ட்‌லி கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர். 

ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் பெரு‌ம்பாலு‌ம் வறுமை‌க் கோ‌ட்டி‌ற்கு ‌கீழேயே உ‌ள்ளன‌ர். 

அர‌சி‌ன் செல‌வின‌ங்களை ‌நி‌ர்வ‌கி‌க்க த‌னி குழு அமை‌க்க‌ப்படு‌ம்.