1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (16:05 IST)

போலீசார் நடத்திய என்கவுண்டர்: 4 ரவுடிகள் சுட்டு கொலை

நாடு முழுவதும் அவ்வப்போது என்கவுண்டர் நடத்தப்பட்டு ரவுடிகள் சுட்டு கொல்லப்படும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று டெல்லியில் நடத்தப்பட்ட ஒரு என்கவுடரில் நான்கு ரவுடிகள் சுட்டு கொலை செய்யபட்டனர்.
 
டெல்லி சத்தர்பூர் பகுதியில் இன்று போலிசாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசார் தரப்பில் 6 பேர் காயம் அடைந்ததால், ரவுடிகளை என்கவுண்டர் செய்ய உத்தரவிடப்பட்டது.
 
இந்த என்கவுண்டரில் நான்கு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ரவுடிகளில் ஒருவரான ராஜேஷ் பார்தி என்பவர் மீது கொலை, கொள்ளை , ஆள்கடத்தல் என 25 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்தான் இந்த பகுதியில் உள்ள ரவுடிகள் கும்பலுக்கு தலைவன் என்றும் கூறப்படுகிறது. இந்த என்கவுண்டரால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.