1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (15:39 IST)

முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா தனி செயலாளர் ரமேஷ் தற்கொலை !

கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பரமேஸ்வரா  தனிச்செயலர் ரமேஷ்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வரான பரமேஸ்வராவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். 
 
பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தியதன் வாயிலாக இதுவரை 4.5 கோடி பணம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.