1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (23:50 IST)

வெற்றியை பாகிஸ்தானுக்கு சென்று கொண்டாடுங்கள்: காங்.க்கு குஜராத் முதல்வர் எச்சரிக்கை

குஜராத் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் பிரச்சாரம் முடிந்து இன்று அம்மாநிலமே அமைதியாக உள்ளது.

இந்த நேற்று பிரச்சாரம் முடிவடையும் கடைசி நேரத்தில் பேசிய குஜராத் முதல்வர் விஜய்ரூபானி, 'குஜராத்தில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் வெற்றியை கொண்டாட பட்டாசு போட நினைப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தான் சென்று கொண்டாடுங்கள். பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவில் கொண்டாடுங்கள்' என்று பேசியுள்ளார்

சமீபத்தில் பிரதமர் மோடி பாகிஸ்தான் அதிகாரிகளை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மணிசங்கர அய்யர் ஆகியோர்களை சந்தித்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.