வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (16:31 IST)

ஆபாச நடிகை சன்னி லியோன் மீது வழக்கு பதிவு: காண்டம் சீன் சர்ச்சை

கோவிலில் காண்டம் சீன் சர்ச்சை: நடிகை சன்னி லியோன் மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்து கோவில்களை அவமதிக்கும் வகையில்  மஸ்திஜாட் என்ற படத்தில் ஆபாச காட்சிகளில் நடித்தற்காக ஆபாச நடிகை சன்னி லியோன், நடிகர் வீர் தாஸ், இயக்குனர் மிலாப் சவேரி உள்ளிடோர் மீது டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



 

பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன் நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் மஸ்திஜாட். இந்த திரைப்படத்தில் அவர் கோவிலுக்குள் ஆபாச காட்சிகளில் நடித்ததாக கூறி வழக்கறிஞர் கெளரவ் குல்டி என்பவர் மும்பை ஆதர்ஸ் நகர் காவல் நிலையத்தில் சன்னி லியோன் மற்றும் இயக்குனர் மீது புகார் அளித்தார். மேலும், அந்த காட்சிகளில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் மிலாப் சாவேரி இயக்கிய இந்த திரைப்படத்தில், கோவிலின் உள்ளே காண்டம் தொடர்பான, அநாகரிகமான விவாதம் நடப்பது போன்ற சீன் இருப்பதாக வழக்கறிஞர் கெளரவ் புகாரில் தெரிவித்துள்ளார்.
 
கௌரவ் குல்டியின் புகாரின் அடிப்படையில், இந்த திரைபடத்தில் நடித்த சன்னி லியோன், நடிகர் வீர் தாஸ், துஸர் கபூர், மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் மிலாப் சவேரி ஆகியோர் மீதும் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, ஆபாச படங்களில் நடித்து வரும் சன்னி லியோனுக்கு நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மாதர் சங்கத்தினர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தற்போது இந்த சர்ச்சையால் அவருக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்த இந்து கட்சியினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், இந்து கோவில்களை அவமதிக்கும் வகையில் நடித்ததாக கூறி நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ததும் இதே வழக்கறிஞர் கௌரவ் குல்டி என்பது குறிப்பிடத்தக்கது.