1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 4 நவம்பர் 2018 (15:47 IST)

பிரபல கட்சி தலைவர் மகன் 6 மாதத்தில் விவாகரத்து...

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாபிற்கும் பிகார் எம்.எல்.ஏவின் மகள் ஐஸ்வர்யாக்கும் கடந்த 6 மாதங்களுக்கும் முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் தற்போது தேஜ்பிரதாப் யாதவ் தனக்கும்  தன் மனைவிக்கும் மனப் பொருத்தமில்லை எனக் கூறி விவாகரத்துக்கு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
 
அதாவது இவரது மானைவி டெல்லியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர்.ஆனால் தேஜ் 11 ஆன் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார்
 
இது குறித்து தேஜ் கூறும் போது:
 
அரசியல் ஆதாயத்துக்காக எனக்கு மனம் பொருத்தம் இல்லாதவருடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர். எங்கள் இருவருக்கும் இந்த ஆறு மாதங்களில் பலமுறை சண்டைகளும், மனக் கசப்பும் நிகழ்ந்துள்ளன .இப்போது  நான் தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
 
வரும் நவம்பர் 29 தேதி பாட்னா குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.
 
தேஜ் - ஐஸ்வர்யா திருமணம் பலகோடி ரூபாய் செலவில் கடந்த மே மாதம் நடைபெற்றது.இதில் ஏராளமான அமைச்சர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.