1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (18:42 IST)

குடும்ப தலைவர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பமே ரயில் முன் குதித்து தற்கொலை

தெலங்கானா மாநிலத்தில் குடும்ப தலைவர் மரணம் அடைந்த அதிர்ச்சியில் மனைவி, இரு மகள்கள் மற்றும் மகன் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.


 

 
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த சத்யநாராயணா(51) என்பவர் நீர்பாசன துறையில் மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை ஐதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது உடல் நல குறைவினால் மரணமடைந்துள்ளார்.
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி, இரு மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் ஓடும் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.