வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (20:55 IST)

பான் கார்டில் பெற்றோரின் பெயரை குறிப்பிட வேண்டுமா...?

வருமான வரிதுறைக்கு பான் எனப்படும் வருமான வரித்துறை எண் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்று நிறுவனத்தில் வேலைக்குச் சேர்பவர்களுக்குக்கூட இந்த பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் முறையாக வருமானக் கணக்கு தாக்கல் செய்யவும் கருப்பு பணப் பதுக்கல்களை தடுக்கவும் இந்த பான் எண் வருமான வரித்துறைக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி கட்டும் போது இந்த எண்ணைக் காட்டுவதும் கட்டாயமாகும்.
 
இந்நிலையில் இனிமேல் பான் விண்ணப்ப படிவத்திலும் பான் அட்டையிலும் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
புதிய விதிகளின்படி தாய் அல்லது தந்தை இருவரில் யாராவது ஒருத்தரின் பெயரை பான் அட்டையில் குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளது.