வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (18:11 IST)

பறவைக் காய்ச்சல் எதிரொலி – பண்ணைகளை அழிக்க மாநில அரசு உத்தரவு!

இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களின் கடும் குளிர் காரணமாக இந்த வைரஸ் பரவுவது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பறவைக் காய்ச்சல் பற்றிய பீதி அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில் முரும்பா கிராமத்தில் 800 கோழி குஞ்சுகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தன. அதையடுத்து அந்த கிராமத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எல்லா பண்ணைகளிலும் கோழிகளை அழிக்க சொல்லி அம்மாவட்ட ஆட்சியர் தீபக் முக்லிகர் கூறியுள்ளார்.