1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 3 செப்டம்பர் 2014 (08:05 IST)

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சி. முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோரின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக மூவரும் தாக்கல் செய்த முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பளித்த அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள், "மறுஆய்வு மனுக்கள் மீதும் அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மீண்டும் சம்பந்தப்பட்ட கைதிகள் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாட முடியாது.

எனவே, மூவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன“ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு நிராகரித்தார்.

இந்நிலையில், தாமதமாக கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தங்களின் மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையின்போது மூவரும் முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.