வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 3 செப்டம்பர் 2014 (10:36 IST)

டெல்லியில் பாஜக எம்.எல்.ஏவை நோக்கி மர்மநபர்கள் துப்பாக்கி சூடு

டெல்லியில் பாரதீய ஜனதா எம்.ஏல்.ஏ வை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர், இதில் அதிருஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

கிழக்கு டெல்லியின் ஷாகாத்ரா தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் ஜிதேந்தர் சிங் ஷாண்டி. அவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதிருஷ்டவசமாக அவர் மீது குண்டு படவில்லை. தொடர்ந்து அந்த நபர்கள் எம்.எல்.ஏவுடன் கைச்சண்டையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ அவரது வீட்டு முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி ஜிதேந்தர் சிங் ஷாண்டி கூறியதாவது:-

“இன்று காலை 5.30 மணி அளவில் இரண்டு மர்ம நபர்கள் எனது வீட்டிற்கு வந்தனர். எனது வீட்டு அழைப்பு மணியை பலமுறை  அழைத்தனர்.

நான் வெளியே வந்து பார்த்த பொழுது இரண்டு பேர் இருந்தனர். ஒருவர் ஹெல்மட் அணிந்திருந்தார். சில ஆவணங்களுக்கு சான்றளிக்குமாறு அவர்கள் இருவரும் என்னை வற்புறுத்தினர்.

ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன். உடனே எனது சட்டை காலரைப் பிடித்த அவர்கள் துப்பாக்கியை எடுத்து சுட முயன்றனர். நான் அவர்களை எதிர்த்து தாக்க முயன்றேன்“. என்ன்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் இந்த வீடியோ பதிவை ஆராய்ந்து வருகின்றனர். அமலும் தப்பி ஓடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.