வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 20 ஜூலை 2014 (13:40 IST)

பள்ளி சிறுமி பலாத்காரம்: வெளியே சொன்னால் துண்டுத் துண்டாக வெட்டிவிடுவேன் என்று மிரட்டல்

டெல்லியிலும் 7 வயது சிறுமி, அப்பள்ளியில் வேலை செய்த பிளம்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், இதை வெளியே சொன்னால்  துண்டுத் துண்டாக வெட்டிவிடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார்.

பெங்களூரில் பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை
எற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியிலும் 7 வயது சிறுமி, அப்பள்ளியில் வேலை செய்த பிளம்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அச்சிறுமியின் தாய் கூறுகையில், “பெங்களூருவில் தற்போது நடைபெற்றுள்ளது போலவே 2 ஆண்டுகளுக்கு முன் என் மகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள், அதை வெளியே சொன்னால் துண்டு துண்டாக வெட்டி விடுவதாக என் மகளை அந்த பிளம்பர் மிரட்டி உள்ளார்.“ என்று கூறியுள்ளார்.

இதனால் சம்பவம் நடந்து 2 மாதங்கள்ளுக்குப் பிறகுதான் அந்த சிறுமி, இது பற்றி தன் தாயாரிடம் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் அளித்த போது, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த சிறுமியின் தாயார் தற்கொலைக்க முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.