1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (10:21 IST)

18 வயதில் இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்ட பெண் – எப்படி தெரியுமா?

டெல்லியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் பிரிட்டன் தூதராக ஒரு நாளுக்கு மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் வகையில் பிரிட்டன் தூதரகம் 2017 ஆம் ஆண்டு  முதல் ஒரு நாள் தூதராக 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்களை நியமித்து வருகிறது. அதையடுத்து 2020-ஆம் ஆண்டுக்கான அந்தப் போட்டியில் தில்லியைச் சோந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றார்.

அவர் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக கடந்த வாரம் புதன்கிழமை பொறுப்பு வகித்தார்.