1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj

சொல்பேச்சு கேட்காத மகள்கள்...நாய்க்கு சொத்து எழுதிவைத்த விவசாயி !

சமீபகாலங்களில் தாய் தந்தையை கவனிக்காம அவர்களின் சொத்தை அபகரித்து வெளியே துரத்திவிடும் குழந்தைகளிடமிருந்து சொத்துகளை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அனைவரும் அறிவோம். பெற்றோரை கவனிக்காம இருந்தால் தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு சட்டமியற்றியுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசமாநிலத்தில் வசிக்கும் நாராயண வர்மா. இவர் ஒரு  விவசாயி. இவரது பேச்சை இவரது 5 மகள்களும் கேட்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் தன் மீது பாசத்துடன் இருக்கும் நாய்க்கு  தனது 18 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை உயில் எழுதிவைத்துள்ளார்.