1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (16:32 IST)

தலித் இளைஞரை மனித மலம் உண்ணச் சொல்லி அடித்து உதைத்த இருவர்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் கோத்வாலி அருகே உள்ள பர்காலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் (வயது 24). இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அந்த பகுதியில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் கோவிந்தை அடித்து துன்புறுத்தி கோவிந்த்தை மனித கழிவை உண்ணச் சொல்லி அடித்து உதைத்துள்ளனர்.
 
இதுகுறித்து கோவிந்தின் சகோதரர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். இதைதொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் லவ்குஷ்தியாகி, வினோத்தியாகி ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளனர். குற்றவாளிகள் கோவிந்த் திருடியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்து உதைத்ததாக கூறியுள்ளனர்.
 
பாதிக்கபட்ட கோவிந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.