1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (18:12 IST)

சோம்நாத் பார்திக்கு ஜாமீன்

மணைவி மீதான கொலைமுயற்சி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சோம்நாத் பார்திக்கு டெல்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 
சோம்நாத் பார்தி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா டெல்லி காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

இந்த  புகாரின் பேரில், கொலை முயற்சி, கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை உடனடியாக சரணடையும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, போலீஸாரிடம் சரணடைந்த சோம்நாத் பார்திக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.