1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 டிசம்பர் 2020 (13:12 IST)

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - மத்திய அரசு!

அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தகவல்.

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 4 மாநிலங்களில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறும் என தகவல்.