1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (09:15 IST)

ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா: இன்றைய நிலவரம் என்ன??

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 47,54,000 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகம் முழுவதும் பரவத்துவங்கியது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,181,934 ஆக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,026,802. பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்தியாவை பொருத்த வரை ஒரே நாளில் 94,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,54,000 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 78,586 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37,00,000 ஆக உள்ளது.