1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (09:48 IST)

90 ஆயிரத்தை தாண்டிய பலிகள்; இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 56 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 83,347 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 56,46,011 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,085 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,87,614 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,68,377 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.