வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (15:16 IST)

50 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 50,20,539 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 82,066 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 82,961 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39,42,360 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,95,933 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.