வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2016 (12:58 IST)

கறிச்சோறு, டிவி: அடம்பிடித்த சிறைகைதிகள்

சத்தீஸ்கார் மாநிலம் தலைநகர் ராய்ப்பூர் மத்திய சிறையில், கைதிகள் கறிச்சோறு மற்றும் டி.வி வேண்டும் என்று காந்தி ஜெயந்தி அன்று திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


 

 
சத்தீஸ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூர் மத்திய சிறையில் ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடிப்படை வசதிகள் தவிர மற்ற வசதிகள் கோரி கைதிகள் திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 
அவர்கள் சிறையில் விளையாட்டு உபகரணங்கள், பரோல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், அசைவ உணவு வழங்குதல் மற்றும் கேபிள் டி.வி. இணைப்பு மூலம் தூர்தர்ஷன் தவிர இதர சேனல்களையும் பார்க்கும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.