1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2021 (08:28 IST)

முதல்ல கொரோனா தடுப்பூசி.. அப்புறம்தான் போலியோ மருந்து! – மத்திய அரசு எடுத்த முடிவு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்க இருப்பதால் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் அதற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் முன்னதாக ஜனவரி 17 முதல் போலியோ மருந்து வழங்கும் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொது கொரோனா தடுப்பூசி வழங்குவது அவசியம் என்பதால் போலியோ மருந்து வழங்கும் பணிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.