செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (17:28 IST)

பெண் பத்திரிக்கையாளரிடம் செல்போன் பறிப்பு... வைரலாகும் சிசிடிவு காட்சிகள்

டெல்லியில் ஓக்லா என்ற இடத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாளர் தனது செல்போனைப் பார்த்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி, டெல்லியில் ஓக்லா என்ற இடத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாள தனது செல்போனைப் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் அவரை  பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள், அவரை நெருங்கி அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
 
இதனையடுத்து, பெண் பத்திரிக்கையாளர் போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த  போலீஸார், திருட்டு நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
 
இந்த வீடியோ இணையதளத்தில்  தற்பொழுது வைரலாகிவருகிறது.