சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு மார்ச் 1-தேதி துவங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியானது. இதில் தேர்வு எழுதியவர்களில் 94% பேர் தேர்ச்சி பெற்றனர். டெல்லி மாண்ட்போர்டு பள்ளியை சேர்ந்த சுக்ரிதா குப்தா என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 496 மதிப்பெண்கள் பெற்று அரியானவை சேர்ந்த சோமையா உப்பல் என்ற மாணவி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இந்த தேர்வு முடிவுகளிலும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.