1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (22:25 IST)

இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்க தடை! மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் இருந்து வரும் நிலையில் தற்போது நாடு முழுவதும் இறைச்சிக்காக பசு, எருமை, ஒட்டகம், காளை,  உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் இன்று கால்நடைகளுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்படி விவசாயிகளுக்கு மட்டுமே இனிமேல் மாடுகளை சந்தைகளில் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்பவர்கள் எழுத்துப்பூர்வமாக இதற்கான உறுதியை அளிக்க வேண்டும். மாட்டுச் சந்தை கமிட்டியும் மாடு விற்பனை செய்வது இறைச்சிக்காக அல்ல என்றும், விவசாய தேவைக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும். இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய இனிமேல் அனுமதி இல்லை. மாடு மட்டுமின்றி ஒட்டகம் உள்பட இன்னும் ஒருசில விலங்குகளுக்கும் இதே நிலைதான்

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.