தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றம் இல்லை - அருண் ஜேட்லி
தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை, என்றும் தனிநபர் வருமானவரி விலக்கில் தற்போதைய நிலையே தொடரும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையினலான மத்திய அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
வருமன வரியை தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், வருமான வரி செலுத்தாதவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.