1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (10:05 IST)

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் முழு முதல் பொது பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.
 
2015-2016 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.15 மணியளவில் கூடுகிறது.
 
இதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
 
இதைத் தொடர்ந்து காலை 11 மணியளவிர் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.