டெல்லி எம்.எல்.ஏ.க்களை ரூ.20 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக முயற்சி - கெஜ்ரிவால்
டெல்லி எம்.எல்.ஏ.க்களை ரூ.20 கோடிக்கு விலைக்கு வாங்கி, டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக நேர்மையற்ற முறையில் டெல்லி எம்.எல்.ஏ.க்களை ரூ.20 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்று குதிரை பேரத்தில் ஈடுபடுவது போல செயல்படுவது ஜனநாயகமா? இது முற்றிலும் தவறு.
கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து ஆட்சி பிடிக்க திட்டமிடும் பாஜக உங்கள் மின் கட்டணத்தை உயர்த்தும், ஊழலில் ஈடுபடும்.
இந்த ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா? டெல்லி மக்கள் ஏன் அமைதியாக உள்ளனர்? இதை சகித்து கொள்ளமுடியாது.
இந்த விவகாரத்தில் மோடி அமைதி காப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.