வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 4 ஜூலை 2015 (23:57 IST)

பாஜக தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ்-கேரள பொறுப்பாளர் எச்.ராஜா: அமித் ஷா அறிவிப்பு

பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளராக முரளிதர் ராவ்-ம், கேரள பொறுப்பாளராக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான புதிய பாஜக பொறுப்பாளர்கள், துணைப் பொறுப்பாளர்கள், கட்சியின் துணை அமைப்புகளுக்கான பொறுப்பாளர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார்.
 
இது குறித்து, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிள்ளதாவது:-
 
தமிழகத்தின் மேலிடப் பொறுப்பாளராக முரளிதர் ராவ், துணைப் பொறுப்பாளராக சி.டி. ரவி நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
புதுச்சேரி பொறுப்பாளராக மகேஷ் கிரி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, கேரள பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பாஜகவின் துணை அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணிக்கு முரளிதர் ராவ், மகிளா மோர்ச்சாவுக்கு புரந்தேஸ்வரி தேவி, எஸ்சி மோர்ச்சாவுக்கு பூபேந்திர யாதவ் (எம்.பி.),  எஸ்டி மோர்ச்சாவுக்கு ராம்விசார் நேதம்,  சிறுபான்மைப் பிரிவுக்கு ஃபாரூக் கான்,  கிசான் மோர்ச்சாவுக்கு சத்யபால் மாலிக், நித்யானந்த் (இணை பொறுப்பு), இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு சுதா யாதவ்,  கிசான் மோர்ச்சா தலைவர் பதவிக்கு விஜய் பால் சிங் தோமரும், இதர பிற்படுத்தப்பட்டோர் மோர்ச்சா தலைவர் பதவிக்கு எஸ்.பி. சிங் பகேல் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.