வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (15:29 IST)

வங்கி வேலை நேரத்தில் மீண்டும் மாற்றம்: வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

வங்கி வேலை நேரத்தில் மீண்டும் மாற்றம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வங்கியின் வேலை நேரம் சமீபத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மாற்றப்பட்டது. ஆனால் சில நாட்களில் வங்கிகள் முழுமையான நேரங்களில் செயல்படும் என்றும் சமூக விலகலை கடைபிடித்து மாஸ்க் அணிந்து வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் வங்கிகள் மாலை 4 மணி வர திறந்திருந்தாலும் வாடிக்கையாளர்களின் வருகை குறைவாகவே இருப்பதன் காரணமாக மே 3ஆம் தேதி வரை வங்கிகள் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதற்கட்ட ஊரடங்கின்போது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு வந்ததால் மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டன. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கில் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. எனவே வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பகல் 1 மணிக்கு முன்னதாகவே தங்களது வங்கிப் பணிகளை முடித்துக் கொள்கின்றனர். எனவே இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.