1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (21:22 IST)

கல்லூரிக்கே சென்றதில்லை என்ற மோடி பல்கலை.யில் பயின்றதாக காட்டியது எப்படி? - கெஜ்ரிவால் கேள்வி

கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறிய மோடி, பின்னர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் பயின்றதாக சான்றிதழ்களை காட்டியது எப்படி என்று புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "முதலில் தான் கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறிய மோடி, பின்னர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில் பயின்றதாக சான்றிதழ்களைக் காட்டியதாகவும், ஆனால் அவையும் போலி என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், மோடியின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானதுதான் என்றால், அவற்றை வெளியிட மோடி தயங்குவது ஏன்? என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.