வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (13:55 IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எம்எல்ஏ: கைது செய்ய உத்தரவு

சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ ராஜ் பாலாபாவை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கடந்த ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் சார்பில் நாவாடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ் பாலாபா, 15வயது சிறுமியை மதுபானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பீகார் நவாடாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 6ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,  இந்த புகாரின் பேரில் நலந்தா காவல் நிலையத்தில் கடந்த 9ம் தேதி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 164கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த எம்எல்ஏ வின் புகைப்படத்தை காட்டி இவர்தான் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று உறுதிசெய்து உள்ளார். மேலும், அந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண்தான் அழைத்து சென்று உள்ளார் என்றும் மதுபானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்ய அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.  ஆனால், அவர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர், தற்போது அவரை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாவும், அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.