1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (19:04 IST)

காஷ்மீரில் பெண்ணை பலாத்காரம் செய்த ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பூஞ்ச் மாவட்டம் மன்கோட் என்ற பகுதியில் ஹக் நவாஸ் என்ற ராணுவ வீரர் ஒரு வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தான் பலாத்காரம் செய்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் ஹக் நவாஸ் அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தைரியமாக ராணுவ வீரர் தன்னை பலாத்காரம் செய்ததை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.